செழியன் & ஜெனியை சேர்த்து வைக்கும் பாக்கியா – பலவித திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்ததாக இனியா தான் ஜெனிக்கு மாத்திரையை மாற்றி கொடுத்து விட்டார் என்ற உண்மை வீட்டினருக்கு தெரிய வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாக்யலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான சீரியல் என்றால் அது பாதிக்கும் சீரியல் தான். இந்த சீரியலில் ஒரு சாமானிய குடும்ப பெண்ணின் ஆசைகள் கனவுகள் மற்றும் அவர் சந்தித்து வரும் பிரச்சனைகளை மிகவும் அழகாக எடுத்துக்காட்டி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் முக்கிய கட்டமாக ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் ஜெனி கர்ப்பமாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை, இதனை ஆரம்பத்தில் இருந்தே அவரிடம் சொல்லும் செழியன் தனக்கு குழந்தை வேண்டாம் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ முதல் எலிமினேஷனில் வெளியேறிய நாடியா சாங் – கதை முழுவதும் பொய்யா?
ஆனால் ஜெனியின் கர்ப்ப செய்தியை அறியும் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஜெனியின் கரு கலைந்து விடுகிறது. இதனால் மொத்த குடும்பமும் சோகமாக இருக்கின்றனர். குறிப்பாக ஈஸ்வரி குழந்தை கலைந்ததற்கு ஜெனி தான் காரணம் என்று கூறி விடுகிறார். அவர் பேசியதால் மிகவும் வருத்தமடையும் ஜெனி தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார்.
ஆண் குழந்தை தான் பெருசு, சண்டை போடும் தனம் & மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
இனி வரும் நாட்களில் பாக்கியா எப்படி செழியன் மற்றும் ஜெனியை சேர்த்து வைப்பார் என்று தான் கதை நகரும் என்றும் கூறப்படுகிறது. அதே போல் இனியா தான் ஜெனிக்கு மாத்திரையை மாற்றி கொடுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து குடும்பத்தினருக்கு தெரிய வந்தால் இனியாவை மன்னித்து விடுவார்களா? இல்லை அவர் மீது கோபப்படுவார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.