தமிழகத்தில் நாளை (அக்.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் 18ம் தேதியான நாளை மின் பாதை விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை பிரச்னை இல்லை என்றும், இதனால் மின்தடை மற்றும் மின் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் மின்சாரத்துறைக்கு வரும் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சிக்கல் – இரண்டாம் பருவ பாடங்கள்!
கடந்த ஆட்சி காலத்தில் மின்சாரத்துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காகவும் மின்தடை செய்யப்படுகிறது.
செழியன் & ஜெனியை சேர்த்து வைக்கும் பாக்கியா – பலவித திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் இருந்து செல்லும் கிழக்கு தொழிற்சாலை பீடரில் உள்ள மின் பாதைகளில் விரிவாக்க பணி மற்றும் பராமரிப்பு பணிகள் திங்கட்கிழமையான நாளை (அக்டோபர் 18) நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கொத்தங்குளம், மேல வன்னியம்பட்டி, அரசியார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.