சரண்யா கழுத்தில் தாலி கட்டிய பாண்டி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் அதிரடி திருப்பம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியல் 400 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது சரண்யாவின் கல்யாணத்தில் ஏற்படும் பல திருப்பங்கள் குறித்த காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2:
பல நட்சத்திர பட்டங்கள் நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டது. அதிலும் ஹீரோவாக நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் முதலில் கதாநாயகியாக சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா மகாலக்ஷ்மி நடித்து வந்தார். ஆனால் ரட்சிதா சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக அரண்மனை கிளி சீரியல் மோனிஷா நடித்து வருகிறார். பல விறுவிறுப்பான காட்சிகள் கதையில் வைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது சரண்யா திருமணம் பற்றிய காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. சரண்யாவின் காதலன் அவரை ஏமாற்ற ஒரு கல்யாண நாடகத்தை நடத்துகிறான். இந்த உண்மையை மாயன் கண்டுப்பிடிக்க, பாண்டியிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்கிறார். ஆனால் உணர்ச்சிவசப்பட்ட பாண்டி சரண்யாவை திருமணம் செய்து கொள்கிறார். சரண்யாவிற்கே இது அதிர்ச்சியாக இருக்கிறது. சரண்யாவின் நிலைமையை நினைத்து கத்தி அழுகிறார். அந்த நேரம் பார்த்து மாயன் கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு வந்து சரண்யாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்கிறார்.
சரண்யாவின் காதலர் பற்றி வந்த பேப்பர் ஆதாரத்தையும் காட்ட போலீசார் காதலனை கைது செய்கின்றனர். இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் சரண்யா பாண்டியை ஏற்றுக் கொள்வாரா? மாட்டாரா? என ட்விஸ்ட் உடன் எபிசோடுகள் கொண்டு செல்லப்படும். சரண்யாவின் எல்லா கோபமும் மாயன் மீது வருகிறது. ஆனால் மற்ற தங்கைகள் மாயன் தான் சரண்யாவை காப்பாற்றியதாக பெருமையாக பேசுகின்றனர். இப்படி கதை கொண்டு செல்லப்படும் நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.