வீட்டை விட்டு வெளியேறி பாக்கியா எடுக்க போகும் அதிரடி முடிவு – “பாக்கியலட்சுமி” ஷாக் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் உறவை பற்றி தெரிந்த பின் பாக்கியா மிகப் பெரிய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியே செல்கிறார். இந்நிலையில் வெளியே சென்ற பாக்கியா அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்த ஷாக் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இத்தனை நாட்களாக பாக்கியாவை ஏமாற்றியது எல்லாம் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. அதனால் குடும்பத்தில் அனைவர் முன்னிலையிலும் கோபி செய்த அனைத்து ஏமாற்று வேலைகளையும் பாக்கியா சொல்லிவிடுகிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் எழில், பாக்கியா என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு ஆதரவாக இருப்பதாக சொல்கிறார். கோபி தன்னை ஏமாற்றி விவாகரத்து வாங்கியதும் தெரிய வர அதனால் மனம் உடைந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
Exams Daily Mobile App Download
பாக்கியா உடன் எழில் மற்றும் செல்வி செல்கின்றனர். பாக்கியா நேராக தன்னுடைய அலுவலகத்திற்கு செல்கிறார். பாக்கியா இல்லாமல் இனியாவும் செழியனும் தாத்தாவும் மிகுந்த வருத்தப்படுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஜெனி இருக்கிறார். இந்நிலையில் செல்வி பாக்கியாவிற்கு துணையாக இருக்கிறார். அப்போது நீ ஏன் வீட்டை விட்டு வந்தாய் அங்கே சந்தோசமாக இருந்து காட்ட வேண்டும், தவறு செய்தவர்கள் தான் வெளியே வர வேண்டும் என செல்வி சொல்கிறார் .
தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? அமைச்சர் பேட்டி!
ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். எழில் நீ சீக்கிரமாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்ல பாக்கியா அதை நினைத்து யோசிக்கிறார். அடுத்து வரும் எபிசோடில் பாக்கியா ராதிகாவிடம் நியாயத்தை கேட்க வேண்டும் என செல்வி உடன் கிளம்புகிறார். அப்போது ராதிகா கதவை திறந்து உள்ளே வாங்க டீச்சர் என சொல்ல பாக்கியா நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என சொல்ல அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா ராதிகாவிடம் பேசிவிட்டு எடுக்க போகும் அடுத்தகட்ட முடிவு என்ன என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.