தமிழகத்தில் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்? அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 5% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக
பொதுமக்களிடைய கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி தற்போது சென்னை மாநகராட்சியில் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 5% பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜி.எஸ்.டி வரி உயர்வால் அரிசி, தானியங்கள் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
அத்துடன் தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 40% மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதனால் தற்போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.