ராணுவ வீரர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும் – பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கம்!

0
ராணுவ வீரர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும் - பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கம்!
ராணுவ வீரர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும் - பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கம்!
ராணுவ வீரர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும் – பாதுகாப்பு அமைச்சகம் பகிரங்கம்!

நாட்டில் தற்போது தெஹ்ரீக்-இ-தலிபான் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் தேர்தல் பணிகளுக்காக ராணுவ வீரர்களை ஈடுபடுத்த கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள்

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் கிளர்ச்சியாளர்கள் தீவிரவாதிகள் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லை பாதுகாப்புப் படையினர் கடுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அத்துடன் கைபர்-பக்துன்க்வா மாகாணத்திலும் வருகிற மே 28 ஆம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். இதனால் ராணுவ வீரர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புச் செயலாளர் ராணுவ வீரர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தாமல் நாட்டின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பெட்ரோல் நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு – ‘இந்த’ தொழில்நுட்பம் கட்டாயம்.. மீறினால் நடவடிக்கை!

மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே இவர்களின் முதன்மையான கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணியில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த கூடாது என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!