TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்குடன் (OTR) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர கணக்கு:
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத் துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டிற்கான TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த வருட இறுதியில் வெளியானது. இதில் 2022ம் ஆண்டு 32 வகையான TNPSC தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன் முதல் கட்டமாக தற்போது குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மார்ச் 23ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
நடப்பாண்டு முதல் TNPSC தேர்வுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் 40% மதிப்பெண்கள் பெறுவதும் கட்டாயமாகும். முறைகேடுகளை தவிர்க்க OMR சீட்டில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரங்கள் தனியாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Officeன் சூப்பர் PPF திட்டம் – தினசரி ரூ.150 சேமித்தால் ரூ.20 லட்சம் ரிட்டன்ஸ்!
அதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பாக TNPSC இணையதளத்தில் நிரந்தர பதிவு (OTR) வைத்துள்ளவர்கள் அதனுடன் உங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 2 தேர்வெழுத உள்ளவர்களுக்கு மார்ச் 23ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைய உள்ள நிலையில் தேர்வர்கள் வரும் 23-ம் தேதிக்குள் ஆதாரை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.