விடாமல் பெய்யும் கனமழை – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. ஜாக்கிரதை மக்களே!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில் மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. குறிப்பாக கேரளாவில் திருச்சூர், பத்தினம் திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு பகலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – கிலோவிற்கு ரூ.20 நட்டம்.. கூட்டுறவுத்துறை தகவல்!
அதிகமாக கனமழை பெய்து ஒரு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது கேரளாவின் திருப்புவனம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை சனிக்கிழமை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.