தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – கிலோவிற்கு ரூ.20 நட்டம்.. கூட்டுறவுத்துறை தகவல்!
தமிழகத்தில் தக்காளி உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதனால கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ. 20 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தக்காளி விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலையானது எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் அரசின் புதிய நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாக 82 ரேஷன் கடைகளில் விற்பனை தொடங்கிட்டது. மேலும் ரேஷன் கடைகளில் ஒருவருக்கு ஒரு கிலோ என ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் ரூ. 120 என விற்பனை செய்யப்படும் நிலையில், பாதிக்கு பாதி விலை குறைவால் மக்கள் வரிசையில் காத்திருந்து தக்காளி வாங்கி சென்றனர்.
WHATSAPP ல் வந்திருக்கும் புதிய அம்சம் – நீங்களும் பயனடைய இத தெரிஞ்சுக்கோங்க!
அதனால் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் 100 க்கு அதிகமான ரேஷன் கடைகள் இருந்தும் குறிப்பிட்ட கடைகளில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதனால் அந்த கடைகளில் எல்லாரும் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ. 20 நஷ்டம் ஏற்படுகிறது. அதனை தற்போது அரசு ஈடு செய்கிறது. மேலும் இந்த அறிவிப்பை அனைத்து ரேசன்கடைகளுக்கும் விரிவுபடுத்தினால் மக்கள் அதன் மூலம் பயனடைவார்கள் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.