தமிழகத்தில் அஞ்சல் துறையின் முக்கிய அறிவிப்பு – ஜூலை 25 குறைகேட்பு முகாம்!
தமிழகத்தில் வரும் ஜூலை 25ம் தேதி அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறைகேட்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 25ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் மத்திய அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் குறைகேட்பு முகாம் நடைபெற இருப்பதாக அஞ்சல் அலுவலக முதன்மை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற இருக்கும் இந்த அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறை கேட்பு முகாமில் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாமல் பெய்யும் கனமழை – 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. ஜாக்கிரதை மக்களே!
மேலும், இந்த குறை கேட்பு முகாமில் நேரில் கலந்து கொள்ள இயலாத அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு ஏதேனும் புகார் இருப்பின் மின்னஞ்சல் மூலமாகவோ, தபால் மூலமாகவோ அல்லது 9786254257 என்கிற whatsapp எண் மூலமாகவோ தங்களுக்கான புகாரினை எழுதி வரும் ஜூலை 10ஆம் தேதிக்குள் அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 10ஆம் தேதிக்கு பிறகு அனுப்பும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.