இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு ‘Orange’ அலர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!
இந்தியாவில் துவங்கியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாநிலங்களின் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை கனமழை நன்றாக வெளுத்து வாங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
எப்போதுமே இந்தியாவில் பருவ மழை ஜூன் மாதத்தின் ஆரம்பத்திலேயே துவங்கி விடும். அந்த வகையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமாகவே மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தற்போது இந்தியாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்ய துவங்கியுள்ளது.
மேற்கு மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தான் இந்த முறை எப்போதும் பெய்யும் கனமழையின் அளவினை விட அதிகமாக பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்து வரும் நாட்களில் கனமழை பரவலாக பல மாநிலங்களில் வெளுத்து வாங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தின் கோராபுட், கந்தமால், காஞ்சாம் மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் சார்பில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் Airtel 5G சேவை எப்போது? தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்!
Exams Daily Mobile App Download
மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி மாவட்டங்களில் தான் அதிகமான மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட், ஒடிஷா, மேற்கு வங்கத்தின் முக்கிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதனால் வங்க கடலோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம் மற்றும் சரைகேலா-கார்ஸ்வான் மாவட்டங்களில் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்