இந்தியாவில் Airtel 5G சேவை எப்போது? தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்!
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை வரும் தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில், தற்போது ஏர்டெல் 5ஜி சேவை எப்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பை தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ளார்.
Airtel 5G சேவை:
நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 5ஜி அலைக்கற்றையை Airtel மற்றும் வோடபோன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோ 5ஜி சேவை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி Airtel 5G சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது நாட்டில் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், டிசம்பருக்குள் முக்கிய மெட்ரோ நகரங்களில் Airtel 5G சேவை இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் ஏர்டெல் 5ஜி சேவை இருக்குமெனவும் நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மேலும், 4ஜி நெட்வொர்க் சேவையுடன் ஒப்பிடும்போது ஏர்டெல் 5G சேவையின் வேகம் கிட்டத்தட்ட 20 முதல் 30 மடங்கு வேகமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை – தேர்விற்கான முழு பாடத்திட்டம்!
Exams Daily Mobile App Download
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து 5ஜி ஸ்மார்ட் போன்களிலும் ஏர்டெல் நெட்வொர்க் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதிவேகமாக இயங்கும் எனவும் தலைமை நிதி அதிகாரி கோபால் விட்டல் அறிவித்துள்ளார். மேலும், 4ஜி சேவையை காட்டிலும் 5ஜி சேவைக்கு கொஞ்சம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், முக்கியமாக ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்