தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனால் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பள்ளி திறப்பு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும் இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் தேர்வுக்குரிய பாடத்திட்டங்களை முடிப்பதற்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு மிகவும் சுமையாக இருந்ததால் வரும் கல்வியாண்டை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து அதன்படி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்றும் தொடங்க உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி திறப்பதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

பாரசிட்டமால் உட்பட 16 மருந்துகளை பரிந்துரை சீட்டு இல்லாமலே வாங்கலாம் – சுகாதார அமைச்சகம் முடிவு!

அதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்திலும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் மாவட்டத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13ம் தேதி அன்று சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!