பாரசிட்டமால் உட்பட 16 மருந்துகளை பரிந்துரை சீட்டு இல்லாமலே வாங்கலாம் – சுகாதார அமைச்சகம் முடிவு!
மருந்து விநியோகத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, பராசிட்டமால் உட்பட 16 அடிப்படை தேவைக்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலே வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து விநியோகம்:
ஒன்றிய சுகாதார அமைச்சகம், கடந்த 1945 ஆம் ஆண்டில் இருந்து மருந்து விற்பனையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதாவது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே சில மருந்துகளை விற்பனை மையங்களில் இருந்து வாங்க முடியும். மேலும், சில மருந்துகளை மட்டும் சில்லறை விற்பனையில் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி சில்லறை விற்பனையில் விற்கும் மருந்துகளை மட்டும் ஓவர்-தி-கவுண்டர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது.
Exams Daily Mobile App Download
மேலும், மருத்துவரிடம் மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் வந்ததால் மருந்து பரிந்துரை சீட் இருந்தால் மட்டுமே மருந்துகளை வாங்கவும், விற்பனை செய்யவும் முடியும். தற்போது இந்த மருந்து விற்பனையில் சில மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதாவது தலைவலி, காய்ச்சல், சளி போன்ற அடிப்படை மருந்து தேவைகளை மட்டும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே வாங்கிக்கொள்ளும்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!
இந்த மருந்துகளின் பட்டியலில், பாராசிட்டமால் உட்பட 16 அடிப்படை பொதுவான மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிருமிநாசினி, ஈறு அழற்சி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மவுத்வாஷ் குளோரோஹெக்சிடின் (குளோரோஹெக்சிடின்), டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபிரோமைடு லோசன்ஜ்கள், பாக்டீரியா எதிர்ப்பு முகப்பரு மருந்து, பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள், வலி நிவாரணி மருந்துகள் ஆகிய மருந்துகளை மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமலே வாங்கிக்கொள்ளலாம். இந்த மருந்துகளை நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.