அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஊழல் புகார் தெரிவிக்க ஆன்லைன் சேவை அறிமுகம்!
இந்திய அரசுத் துறையில் உள்ள ஊழியர்கள், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேடு உள்ளிட்ட சில புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து வரும் லோக்பால் அமைப்பு தற்போது புகார்களை அளிக்க ஆன்லைன் சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது.
ஊழல் புகார்
இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர லோக்பால் என்ற மசோதா 2013ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் படி, அரசு ஊழியர்கள் முதல் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் மீதான ஊழல்களை இந்த அமைப்புக்கு தெரியப்படுத்தலாம். இத்தகைய புகார்களை விசாரிக்க மத்திய அரசில் லோக்பால் அமைப்பு மற்றும் மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கரும்பு விவசாயிகள் முக்கிய கோரிக்கை!
இப்போது லோக்பால் மசோதாவில், ஊழலுக்கு எதிரான புகார்களை தெரிவிக்க ஆன்லைன் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் போன்றோர் மீதான புகார்களை ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இந்த ஆன்லைன் சேவைகளை லோக்பால் தலைவர் பினாகி சந்திர கோஸ் தற்போது தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ‘அரசு ஊழியர்கள் ஊழல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (டிச.15) உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
இந்த புகார்களை எளிய முறையில் பெற்றுக்கொள்வதற்காக தான் தற்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்பது இந்த மசோதாவின் திட்டமாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லோக்பால் ஆன்லைன் இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.