தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கரும்பு விவசாயிகள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கரும்பு கொள்முதல்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு, வேட்டி, சேலை, ரொக்கப்பரிசு போன்றவைகள் வழங்கப்படும். அதே போல 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.20,000 வரை சம்பள உயர்வு? அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
மேலும் அனைவருக்கும் ஒரு கரும்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் ஒரு கரும்புக்கு 13 ரூபாய் என விலை நிர்ணயித்து கூட்டுறவுத்துறை நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்கின்றனர். ஆனால் ரூ.18 வரை விலை கொடுத்து வாங்கியதாக கணக்கை மாற்றி பல கோடி கணக்கில் மோசடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் வரை நஷ்டமாகிறது. மேலும் கரும்பு விளையாத இடங்களில் கூட கரும்பு வாங்கியதாக கணக்கில் காட்டி வருகின்றனர் என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!
இது போன்ற முறைகேடுகளை தடுக்க, அந்தந்த மாவட்ட வட்டார அளவில் வேளாண்மை அலுவலர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் மூலம் உண்மையான கரும்பு விவசாயிகளை அறிந்து அடையாளப்படுத்த வேண்டும். அவர்களிடம் இருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடு தடுக்கப்படும்.