தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (டிச.15) உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (டிச.15) உள்ளூர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (டிச.15) உள்ளூர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை (டிச.15) உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து விதமான விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக அனைத்து கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஏனெனில் பொதுமக்கள் அனைவரும் திருவிழாக்களுக்கு வருகை புரிவதால் தனி மனித இடைவெளி கடைபிடிக்க முடியாது. அதனால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து விதமான கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் UKG & LKG வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் அமைந்துள்ள தாவூத் காம் தர்காவில் வெகு விமர்சையாக கந்தூரி திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவானது இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் என்பவரை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 720வது ஆண்டு கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நாளை (டிச.15) சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது

தமிழகத்தில் 6 – 12ம் வகுப்புகளுக்கு ஜன.3 முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து – அரசு அறிவிப்பு!

இதனை கண்டுகளிக்க இந்தியாவில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அல்லாதவர்கள் மேலும் வெளிநாட்டினர்கள் கூட வருகை தருகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாக பொது மக்கள் இவ்விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளை சரி செய்யும் விதமாக ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!