தமிழகத்தில் 6 – 12ம் வகுப்புகளுக்கு ஜன.3 முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 6 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையிலான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள்
கொரோனா 2ம் அலைதடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வருகின்ற டிச.31ம் தேதி வரை ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் அடுத்த 18 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பள்ளிகள் செயல்படுவதில் கூடுதல் தளர்வுகளை அளித்துள்ள அரசு, ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் 6 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசில் 205 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரும் 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை அதாவது 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கம் போல செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் டிச.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
தவிர தமிழகத்தில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில், டிச.31 மற்றும் ஜன.1 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகளுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஒமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளை நடத்துவதற்கான தடை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.