பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11 வரை ஆன்லைன் வகுப்பு? அரசு திடீர் அறிவிப்பு!
பள்ளி மாணவர்கள் அனைவர்க்கும் தற்போது ஜூலை 11 ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள்
இலங்கை வரலாறு காணாத அளவிற்கு இந்தாண்டு தான் பொருளாதார சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது. அதாவது, ஒரு கிலோ காய்கறிகளின் விலை கூட தங்க நகைகளுக்கு இணையாக விற்கப்படுகிறது. இதனால் மக்கள் அன்றாட உணவுக்கே அல்லாடி கொண்டிருக்கின்றனர். உணவு பொருட்களுக்கு மட்டுமல்லாமல் மருந்து தட்டுபாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்க்கும் சிரமப்பட வேண்டி இருக்கிறது. அதாவது, எரிபொருட்களின் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாடும் நிலவி வருகிறது. எனவே, ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் மாட்டி தவித்து வருகின்றனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய சேவைகள் அறிமுகம்!
இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசு தான் முக்கிய காரணம் என குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு இந்த அளவிற்கு நெருக்கடி இருக்காது என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நாளுக்கு நாள் கூடுதலான தட்டுப்பாடு தான் நிலவி வருகிறது. மேலும், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஓரளவிற்கு எரிபொருள் உபயோகத்தை குறைக்கும் பொருட்டு இலங்கையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், ஒரு வாரத்திற்கு மட்டுமே ஆன்லைன் வகுப்பு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு வாரத்திற்கு ஆன்லைன் வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்பதால் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.