சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. தினசரி 25000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை:
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவதால் தொற்று மென்மேலும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என்பதால் கோயில் நடை சாத்தப்பட்டு வழக்கமான பூஜைகள் கோயில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் தடுப்பூசி பயன்பாடு மற்றும் மக்கள் ஒத்துழைப்பு, அரசின் கட்டுப்பாடுகள் போன்றவர்களால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது கார்த்திகை மாத மண்டல பூஜைக்கு பக்தர்கள் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கு 2023 வரை PhD கட்டாயம் இல்லை – யுஜிசி அதிரடி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல-மகர விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. நவம்பர் 17 முதல் முன்பதிவு அடிப்படையில் தினசரி 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு அக்டோபர் 11ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.