ஆயிரம் காவலர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் காவலர் பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. இதையடுத்து புதுச்சேரியில் காவலர் பணியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுவையில் எஸ் ஐ, ஏஎஸ்ஐ, தலைமை காவலர் மற்றும் போலீசார் என 163 பேருக்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறப்பித்துள்ளார். இவ்விழாவில் இவர் பங்கேற்று கூறியதாவது, காவல் துறையில் ஏராளமான பதவிகளில் உள்ள 163 பேருக்கு இப்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
இதையடுத்து வருகிற ஜனவரி 20ம் தேதிக்குள் 390 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்கள் காவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு நடத்திய பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டுப் பயிற்சி முடிக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார். அடுத்தாக 300 காவலர் பணிக்கான தேர்வும், 400 ஊர்க்காவல் படை வீரர் பணிக்கான தேர்வும் இந்த ஆண்டில் நடத்தப்படும். எனவே இந்த ஆண்டில் காவலர் பணியிடத்தில் மொத்தம் 1000 காலிப்பணியிடங்கள் உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் – பெற்றோர்கள் வேதனை!
அத்துடன் எஸ்ஐ பணியிடத்தில் காலியாக உள்ள 47 இடங்களை நேரடி தேர்வு மூலமாக தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கையை மத்திய உள்துறையிடம் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு எஸ்ஐ பணியிடத்திற்கான தேர்வு நடத்தப்படும். இதனை தொடர்ந்து தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தேர்வர்கள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.