1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!
கொரோனா பரவல் காரணமாக மும்பையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தாக்கம் அதிகமாகி வருகிற நிலையில் மும்பையிலும் நோய்த்தொற்று வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 11877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்தை விட 29 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – நாளை முதல் விநியோகம்!
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை விட ஓமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் ஆற்றல் உடையதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மும்பை நகரில் ஓமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருவதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் – பெற்றோர்கள் வேதனை!
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மாநில அரசு விடுமுறை அளித்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு 27 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மும்பையில் ஊரடங்கு பிரபுக்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.