தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம் – பெற்றோர்கள் வேதனை!
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இன்று மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் மீண்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கொரோனா தாக்கம் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று அறிவித்ததன் படி இன்று வகுப்புகள் தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் ரூ.50000 நிதியுதவி – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு சமீபத்தில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 1 – 8 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வருகிற ஜனவரி 10 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும். மேலும் இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA & DR நிலுவைத்தொகை? இம்மாதம் அறிவிப்புகள் வெளியீடு!
2 மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு சென்ற பள்ளி குழந்தைகள் மீண்டும் ஆன்லைன் பாடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது மீண்டும் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களின் கற்றல் திறன் குறைய வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்களுக்கு இந்த அறிக்கை வேதனை அளித்து உள்ளது. இதுவரையில் காலையில் அல்லது மாலையில் ஒரு நேரம் மட்டும் வகுப்புகளுக்கு சென்ற மாணவர்கள் இன்று முதல் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர்.