தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்ட வழிகாட்டுதல்கள் – வெளியீடு!
ஒரு மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்று வேலை பார்க்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு
மத்திய அரசு அறிவித்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டமானது, ஒரு ரேஷன் அட்டை பயனர் வெவ்வேறு மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தற்போது மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை பயனர் ஒருவர் எப்படி செயல்படுத்த முடியும் என்ற விளக்கம் தற்போது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
இது தொடர்பாக சேலம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்று பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் கீழ் ஒருவர் எந்த மாநிலத்தை சேர்ந்த ரேஷன் அட்டைதாரராக இருந்தாலும், அவர் வசிக்கும் மாநிலத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் கீழ் பயனடைய, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்குட்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை(PHH) அல்லது அந்தியோயா அன்ன யோஜனா அட்டை (AYY) போன்ற ரேஷன் அட்டைகளை பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும் வேறு மாநிலங்களில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு அந்த அட்டைகளை அவசியம் இல்லை.
கைநிறைய ஊதியத்துடன் செவிலியர் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதாவது பயனரின் ஆதார் அட்டை எண் மற்றும் கைரேகை பதிவுகள் மூலமாகவே அவர்களின் குடும்பத்துக்கு தேவையான அரிசி அல்லது கோதுமையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வேறு மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமையை பெறுபவர்கள், அரிசிக்கு 1 கிலோ வீதத்தில் ரூ.3 மற்றும் கோதுமை 1 கிலோ வீதத்தில் ரூ.2 என விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இது தவிர ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மற்ற பொருட்களையும் அதற்குரிய விலை கொடுத்து பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.