கைநிறைய ஊதியத்துடன் செவிலியர் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் படிப்பு முடித்தவர்கள் அயல் நாடுகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் இருந்து அயல்நாடுகளுக்கு பணிக்கு செல்ல விரும்புவோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அளிக்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அரசு வெளிநாட்டு வாய்ப்பு நிறுவனத்தை தோற்றுவித்தது தமிழக அரசு. மேலும் வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமுள்ள அங்கீகரிக்கபடாத தனியார் முகவர்களிடம் ஏமாறுவதை தவிர்க்கவும், பணம் பறிக்கும் முகவர்களிடம் இருந்து காப்பாற்றவும் இந்த நிறுவனம் உதவுகிறது. இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025க்குள் Vision 25/25 திட்டம்!
இந்த நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தரும் நம்பகத்தன்மை பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது. ஓமன், கத்தார், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மருத்துவ துறையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். அயல்நாடுகளில் மருத்துவ துறை சார்ந்த ஊழியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. அதனால் தமிழகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் 500 செவிலியர்களுக்கு ஆங்கில புலமை தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – இணையதளம் முடக்கம்!
இதில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு துவக்க நிலையில் ஊதியமாக 18 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த பணிக்காக இங்கிலாந்து, குவைத் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட இணையதளத்தின் தேவையான விவரங்களை அறியவும், கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.