தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மே 10 முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டது. அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் ஒளிபரப்பப்பட்டது. மறுபுறம் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் எவ்வித தொய்வும் இன்றி தீவிரமாக நடைபெற்றது. அரசின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைந்து உள்ளது.
கைநிறைய ஊதியத்துடன் செவிலியர் வேலைவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையாக செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனை பின்பற்றி சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சில மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சிலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அப்பள்ளிகள் மட்டும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.
TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2025க்குள் Vision 25/25 திட்டம்!
தினசரி மாணவர்கள் கூட்டம் பேருந்துகளில் அலைமோதுவதை காண முடிகிறது. தற்போது மாணவர்கள் சனிக்கிழமையும் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என கோரி உள்ளனர். கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பள்ளிகளுக்கு சென்று வருவதால் ஏற்படும் மன உளைச்சலை தடுக்கும் நோக்கில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.