தமிழகத்தில் குறைக்கப்பட ஆம்னி பேருந்து டிக்கெட் விலை – மகிழ்ச்சியில் பயணிகள்!
தமிழகத்தில் பண்டிகை காலத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக ஆம்னி பஸ்களின் கட்டணம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ் கட்டணம்:
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்காகவும், தொழில் நிமித்தமாகவும் பலர் சொந்த ஊர்களை விட்டு வேறு இடங்களுக்கு சென்று தங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் பண்டிகை காலத்தின் போது வருகிற தொடர் விடுமுறை நாட்களில் தான் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் , குடும்பத்தினரையும் சந்திப்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட அதிக எண்ணிக்கையில் தான் தமிழக அரசு, தொடர் விடுமுறை காலங்களில் இயக்குகிறது.
ஆனால், அரசு பேருந்துகளில் அனைவருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் இயக்கும் ஆம்னி பேருந்துகளில் ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் நிறுவன பேருந்துகள் டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர். மக்களும் வேறு வழியில்லாமல் அதை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
அதிகரிக்கும் UPI மோசடி.. உங்கள் பணத்தை பாதுகாக்க இதுதான் வழி – State Bank கொடுத்த டிப்ஸ்!
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக, அரசுக்கு பல முறை புகார்கள் சென்றதால், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, குறைக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்