தமிழகத்தை தாக்கும் ஓமிக்ரான் – 175 பேர் பாதிப்பு.. மீண்டும் ஊரடங்கா? அச்சத்தில் மக்கள்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்துள்ளது என்று மக்கள் நிம்மதி அடைந்து வந்த நேரத்தில் தற்போது அடுத்த தாக்குதலாக ஓமிக்ரான் வைரஸில் இருந்து மாறுபாடு அடைந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் மீண்டும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஓமிக்ரான்:
தமிழகத்தை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று ஆட்டி படைத்து வருகிறது. இந்த கொரோனாவால் ஏராளமான உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றானது உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவத் தொடங்கியது. அவ்வாறு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்கள் பேரிடரை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ துறையின் முயற்சியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் ஓரளவு மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக அந்நாட்டில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நாளை அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய்கள் – இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
சீனாவை தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றிலிருந்து மாறுபாடு அடைந்த வைரஸ் பரவி வருகிறது. தற்போது தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கி விட்டது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 175 பேர் மாறுபாடு அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் பட்சத்தில் தடுப்பு பணியாக சீனாவை போல தமிழகத்திலும் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.