இந்தியாவில் நாளை அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய்கள் – இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு!
இந்திய ரிசர்வ் வங்கியானது நாளை முதல் நாட்டில் டிஜிட்டல் ரூபாய்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
டிஜிட்டல் ரூபாய்:
நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் போலவே, டிஜிட்டல் கோடுகள் (code) மூலம் தயாரிக்கப்படும் டிஜிட்டல் ருபாய் நோட்டுகள் நாளை முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவற்றை அரசும், தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றின் மதிப்பு எதிர்காலத்தில் பலமடங்கு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2022-2023ம் நிதியாண்டில் பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் டிஜிட்டல் ரூபாய்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
வாட்ஸ் அப் பயனர்களுக்கான முக்கிய தகவல் – இதை செய்தால் கணக்கு தடை செய்யப்படும்! கவனம் மக்களே!
இதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி ஆகிய நாளை சோதனை முறையில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இவை முழு பயன்பாட்டிற்கு வர இன்னும் 1 மாத காலம் ஆகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட நாட்டின் 9 முக்கிய வங்கிகளில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.