வாட்ஸ் அப் பயனர்களுக்கான முக்கிய தகவல் – இதை செய்தால் கணக்கு தடை செய்யப்படும்! கவனம் மக்களே!
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சில காரணங்களால் உங்களது வாட்ஸ் ஆப் தடை செய்யப்பட நேரிடும். அத்தகைய காரணங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடுவது குறித்து இப்பதிவில் காண்போம்.
வாட்ஸ்அப் தடை:
இன்றைய இணைய உலகில் வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தாதவர்கள் எவரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களின் அனைத்து வேலைகளிலும் ஒன்றி விட்டது. காலையில் எழுந்து நண்பர்களுக்கு குட் மார்னிங் சொல்லுவதில் ஆரம்பித்து இரவு வரை நாம் அதிக அளவு வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய வசதிகளை அளித்து வாட்ஸ்அப் பயன்பாட்டை மேலும் எளிதாக்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது வாட்ஸ் அப்பால் மக்கள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். அதே நேரம் இந்த வாட்ஸ் அப்பால் சில தீமைகள் நிகழ்கிறது. அதானல் தான் வாட்ஸ் அப் நிறுவனம் நீங்கள் விதிமுறைகளை மீறும் போது உங்களது வாட்ஸ்அப் கணக்கை தடை செய்கிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் ‘Good Morning’ எனும் செய்தியை அதிக முறை பயன்படுத்தினால் கூட தடை செய்யப்படுவீர்கள். மேலும் தேவையில்லாத, மற்றும் அதிகாரபூர்வ மற்ற தகவலை பகிர்வது, ஒரே தகவலை பல முறை ஷேர் செய்வது போன்ற காரணங்களால் வாட்ஸ் அப் தடை செய்ய நேரிடும்.
ரயில்வே பாதுகாப்பு படையில் (RPF) வேலைவாய்ப்பு – பரவும் போலி தகவல்.. அமைச்சகம் விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
அவ்வாறு நிறுவனம் உங்களது மொபைல் வாட்ஸ் அப்பை தடை செய்தால் ‘This account is not allowed to use WhatsApp என்ற மெசேஜ் உங்களுக்கு கிடைக்கும் இதனை வைத்து உங்கள் வாட்ஸ் அப் தடை செய்யப்பட்டதை அறியலாம். பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே வாட்ஸ் அப் தடை செய்யப்படும் ஒரு வேளை நிரந்தர தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய முடியாது. நீங்கள் வாட்ஸ் அப் லாகின் செய்த மொபைல் எண்ணை தான் மாற்ற வேண்டும்.