ரயில்வே பாதுகாப்பு படையில் (RPF) வேலைவாய்ப்பு – பரவும் போலி தகவல்.. அமைச்சகம் விளக்கம்!
ரயில்வே துறையின் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் மற்றும் உதவி துணை ஆய்வாளர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யபடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து தற்போது ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மக்கள் கடந்த 2 வருடங்களாக வேலைவாய்ப்புகளுக்காக காத்து கொண்டு கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மோசடி கும்பல் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர். பிரபல நிறுவனத்தின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பு வழங்குவது போல போலியான விளம்பரங்களை தயார் செய்து அதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் ஷேர் செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனை அறியாமல் வேலை நாடுநர்கள் மோசடி நபர்களின் வலையில் விழுந்து அவர்கள் அனுப்பும் இணையதள பக்கங்களில் தனது விவரங்களை பதிவு செய்து விடுகின்றனர். முதலில் இதன் மூலம் அவர்கள் டேட்டா திருடப்படுகிறது. மறுபுறம் வேலைக்காக குறிப்பிட்ட தொகையை கட்டும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். மக்களும் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். சமீப காலமாக இது போன்ற மோசடி வேலைகள் அதிகரித்து வருகிறது.
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ள அரசு – புதிய கொள்கை அறிமுகம்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் மற்றும் உதவி துணை ஆய்வாளர்கள் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் போலியான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து பலரும் விவரங்களை கேட்டு வரும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இது போலியான செய்தி என்று தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே அமைச்சகத்தால் இதுபோன்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.