டிச.19 முதல் ஜன.30 வரை ஊரடங்கு அமல் – அரசு நடவடிக்கை! கொரோனா பரவல் எதிரொலி!
ஒமிக்ரான் வைரஸ் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (டிச.19) முதல் ஜனவரி 30ம் தேதி வரை பார்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் தினசரி 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
தற்போது உலக நாடுகளில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டென்மார்க், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் கூட 100க்கும் மேற்பட்டவர்களிடம் கண்டறியப்பட்ட இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 7% ஊதிய உயர்வு! கூட்டுறவுத்துறை உத்தரவு!
இந்நிலையில் நாடு முழுவதும் பரவி இருக்கும் நோய் தொற்றை எளிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அயர்லாந்து அரசு, பார்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் நாளை (டிச.19) முதல் ஜனவரி 30ம் தேதி வரை தினந்தோறும் இரவு 8 மணி முதல் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மைக்கேல் மார்ட்டின் கூறுகையில், ‘ஐரோப்பா முழுவதும் மக்களிடையே மிகவும் வலுவான மற்றும் உடனடி தொடர்புகள் இருப்பதை தடுக்கும் விதமாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
இது பலருக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கும். என்றாலும் தினசரி இரவு 8 மணிக்கு முன்னதாக நடைபெறும் உட்புறம் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் 50 சதவீத திறனுடன் மட்டுப்படுத்தப்படும். திருமணங்களுக்கு அதிகபட்சம் 100 விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஒமிக்ரான் புதிய பாதிப்புகள் குறித்து சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – போட்டித் தேர்வு ரத்து?
இப்போது ஒமிக்ரான் தொற்று எல்லா வயதினரிடையே மிகவும் ஆக்ரோஷமாக பரவுகிறது என்றும் இன்று வரை எதிர்பார்த்ததை விட அதிகமான விகிதத்தில் தொற்றுநோய்களை காண வாய்ப்புள்ளது என்றும் பிரதமர் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதங்களை செலுத்தியுள்ள நாடுகளில் ஒன்றான அயர்லாந்து, தடுப்பூசி விகிதத்தில் முந்தைய அலைகளின் போது இருந்ததை விட மிகவும் வலுவான இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அயர்லாந்தில் நேற்று (டிச.17) ஒரு நாளில் 4,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.