தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 7% ஊதிய உயர்வு! கூட்டுறவுத்துறை உத்தரவு!
தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகளில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
7% ஊதிய உயர்வு:
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள் மற்றும் சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கூட்டுறவு பண்டக சாலைகளில் கணக்கர், எழுத்தர், காசாளர், செயலர் உள்ளிட்ட பதவிகளில் பெரும்பாலானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயம் கடந்த 2016ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – உணவு வழங்கல்துறை அமைச்சர்!
இவ்வாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு கூட்டுறவு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தினால் தமிழகம் மிகப்பெரிய பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்தது. தற்போது நிலை கொஞ்சம் சீராக அமைந்து வருவதால் கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஆய்வு மேற்கொண்ட குழு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்தது.
தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – போட்டித் தேர்வு ரத்து?
அதன்படி தற்போது புதிய ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7%, தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நஷ்டத்தில் செயல்படும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 3% ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளது. வரும் 2022 ஜனவரி மாதம் முதல் ஊதிய உயர்வு மற்றும் இதர படிகள் அனைத்தும் செயல்படுத்தி புதிய ஊதிய முறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.