விரைவில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி பற்றாக்குறை சரி செய்யப்பட்ட பின் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த வருடம் தீவிரமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு ஊழியர்கள் இரவு பகலாக பணி செய்து வந்தனர். பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது சேவைகளை வழங்கி வந்தனர். இதனால் ஏராளமானோர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். இந்த நிலையில் அரசு தனது ஊழியர்களின் நலன் கருதி கொரோனா தொற்றுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 7 நாட்கள் தற்செயல் விடுப்பு அளிக்கப்பட்டது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – சீரியலில் இருந்து விலகும் பாரதி!
அதனை தொடர்ந்து கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு அரசு ஊழியர்களை கருத்தில் கொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 34% ஆக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூரில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ரூ.5.75 லட்சம் கோடி நிதி பற்றாக்குறையில் இருந்தது. தற்போது அதை சரி செய்யும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை சரி செய்யப்பட்ட பின் பழைய ஓய்வூதிய திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.