தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரிடம் மனு வழங்கல்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரிடம் மனு வழங்கல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரிடம் மனு வழங்கல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரிடம் மனு வழங்கல்!

தமிழகத்தில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பல நாட்களாக எதிர்பார்த்து வரும் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு , தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது.அண்மையில் ராஜஸ்தானில், மாநில சட்டப்பேரவையில் 2022-23 ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மையமாக வைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு , தமிழக முதல்வருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆதார், பான் இணைப்பிற்கு மார்ச் 31 கடைசி நாள்!

அந்த மனுவில் ராஜஸ்தான் அரசு அறிவித்ததை போல, தமிழகத்திலும் 2004 ஜனவரி 1ம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த தமிழக அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடர் போராட்டம் நடந்தது. அப்போது திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்று ஊடகங்கள் வாயிலாக திமுக சார்பில் பேட்டி அளிக்கப்பட்டது, இதனை நினைவு படுத்துகிறோம் என்று மாநில தலைவர் ராமு சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு!

மேலும் தமிழக அரசில் பணிபுரியக்கூடிய லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் தங்களது முக்கியமான வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!