தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு!

0
தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் மார்ச் 1 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு!

தமிழகத்தில் வரும் மார்ச் 1ம் தேதி மகா சிவராத்திரி தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் விடப்படும் சிறப்பு பண்டிகைகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் முக்கிய தினங்களில் விடுமுறை அளிக்கப்படும் போது மற்றொரு நாள் பணி நாளாக அறிவிக்கப்பட என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் வருடம்தோறும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய தினங்களில் ஒன்று மகா சிவராத்திரி தினம் ஆகும். இந்த தினம் அன்று சிவனுக்குரிய விரதம் நாள் முழுவதும் இருந்து, இரவு தூங்காமல் கண் விழித்திருந்து இறைவனுக்கு அபிஷேகம், அலங்கார, பூஜை ஆராதனை செய்யப்படும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை கடைகள் செயல்படும்!

இதுவே மகா சிவராத்திரி நாளில் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2022 மார்ச் 1ம் தேதி அதிகாலை 2.51 மணி வரை திரியோதசி பின்பு சதுர்த்தி திதி வருவதால், மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடைபெறும். இந்த திருவிழாவில் அனைத்து பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சிவனை தரிசனம் செய்து விழாவை சிறப்பிப்பார்கள்.

மீண்டும் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? நெருக்கடியில் அரசு!

இதன் காரணமாக குமரி மாவட்டத்திற்கு வருகிற 1 ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ந்து அன்றைய தினம் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். மேலும் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1-ந் தேதி விடப்படும் விடுமுறைக்கு பதிலாக 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!