தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமை கடைகள் செயல்படும்!
தமிழகத்தில் இன்று நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கைரேகை பதிவு முறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இன்று (சனிக்கிழமை) நியாய விலைக்கடைகள் செயல்படும் என்று அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
நியாய விலைக்கடை
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் மலிவான விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் பொருட்களை பயோமெட்ரிக் முறையில் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. அதாவது ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி அந்தந்த கார்டுதாரர்கள் மட்டுமே அவர்களின் பொருட்களை வாங்க முடியும். இதனால் ரேஷன் கடைகளில் முறைகேடுகள் ஏற்படுவது குறைகிறது.
மீண்டும் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? நெருக்கடியில் அரசு!
இத்திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் தங்கள் கைரேகை பதிவை வைத்து உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதனால் இந்த பயோ மெட்ரிக் முறை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த முறையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொருட்களை விநியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் தினத்துக்குள் வழங்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
ஆனால் கைரேகை பதிவு முறை நடைமுறையில் இருந்ததால் கடந்த மாதம் ஜனவரி 30ம் தேதி வரை வழங்கப்பட்டது. அத்துடன் ஜனவரி 30ம் தேதி அன்று ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். பொங்கல் பரிசு விநியோகம் செய்ய வேண்டும் என்பதால் ஜனவரி 30ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு முறையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உணவு பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளன. அதனால் இன்று (சனிக்கிழமை) தமிழக முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.