தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை போன்றவற்றை வழங்க வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுவித்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். இவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்கு மேல் ஆகியும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது உள்ள நிதி நெருக்கடி நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவது கேள்வி குறியாக உள்ளது என்று அரசு துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளதை சுட்டி காட்டி அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – விரைவில் புதிய விதிமுறைகள் அமல்!
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பரிசீலனைகள் நடைபெற்றது. ஆனாலும் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து சட்ட மன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது கேள்வி எழுப்பிய போது பேசிய நிதியமைச்சர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வரின் உத்தரவுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை பணி, மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும்.மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு போன்றவைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் உயர்நிலைப் பள்ளி முன்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.