ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – விரைவில் புதிய விதிமுறைகள் அமல்!
இந்தியாவில் ரேஷன் கார்டு செயல் முறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இனி தகுதியற்றோர் பயன் பெற முடியாது என்றும் போலியான ரேஷன் கார்டுகளை அரசு ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றனர். தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மற்ற மாநில ரேஷன் அட்டைதாரர்களும் பயோமெட்ரிக் முறையில் தாங்கள் வசித்து வரும் மாநில ரேஷன் கடைகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அதிரடியாக உயர்ந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை!
ஆனால் வசதிப்படைத்தோர் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனால் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க அவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.பிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரேஷன் கார்டு ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தற்போது ரேஷன் கார்டு விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த புதிய விதிகளின்படி ரேஷன் கடைகளில் தகுதி உடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக் கூடும். மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரைகளை மனதில் கொண்டு, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இறுதி செய்யப்படும். அனைத்து மாநிலங்களிலும் தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.