தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வருக்கு கடிதம்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2004 ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் பல்வேறு புதிய நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டு ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டது. அதன்படி இனி ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களின் பணி காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. உடனடியாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
TANCET தேர்வு 2022: ஸ்கோர் கார்டு பதிவிறக்கம் ஜூன் 15க்கு ஒத்திவைப்பு! முழு விவரம் இதோ!
இந்த நேரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிர்யர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராமநாதபுர மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அவர்கள் எழுதிய கடிதத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு உடனடியாக ரூ.26 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைப்பதுடன் மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தும் பங்களிப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியால் ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும். பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. அதனால் பழைய திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.