தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல் – ஜூன் 16 உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள் போராட்டம்:
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீகாரில் இந்த திட்டம் அமல்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.
திருப்பூரில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என CPS ஒழிப்பு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதனால் பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் சென்னையில் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏகப்பட்ட அரசு துறை ஊழியர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.