திருப்பூரில் நாளை (ஜூன் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி துணை மின் நிலையத்தில் நாளை ஜூன் 9 அன்று உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர் மற்றும் தண்டுக்காரன்பாளையம் உட்பட சில பகுதிகளில் மின் விநியோகம் தடையாகும் என அம்மாவட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
மின்தடை :
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் நேரிடவும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தான் மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்!
அவ்விதமாக நாளை (ஜூன்) வியாழக்கிழமை அன்று அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட்.
Exams Daily Mobile App Download
அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.