அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – மாநில அரசு முடிவு!

0
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் - மாநில அரசு முடிவு!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் - மாநில அரசு முடிவு!
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – மாநில அரசு முடிவு!

ராஜஸ்தான் மாநில அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையில், மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக ராஜஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விதிகளையும் நிதித்துறை மாற்றியுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் ராஜஸ்தான் மாநில சிவில் சர்வீசஸ் பங்களிப்பு ஓய்வூதிய விதி (2005) தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது, அரசுத்துறையில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்காக, தேசிய பென்சன் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களின் சம்பளத்தை ஏப்ரல் 1 முதல் நிறுத்துவதற்கு மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு உறுதி!

இதனால், 2004ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இது தவிர 2022 ஏப்ரல் மாதம் முதல் மார்ச் 31ம் தேதிக்கு முன் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் இந்த ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க இருக்கிறது. மற்றபடி, 2004 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெற உள்ளனர். இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநில ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 39000 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!