தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி & சம்பள உயர்வு உறுதி!
தமிழக ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பல கோரிக்கைகளுக்கு பிறகு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களை போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்காமல் கூட்டுறவு துறை அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
விரைவில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வை வழங்க வேண்டும் என அவ்வப்போது ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி கூடிய விரைவில் அகவிலைப்படி சம்பள உயர்விற்கு வழி வகுக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது குறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த அகவிலைப்படி சம்பள உயர்வு விவகாரம் முதல்வர் தலைமைக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர். இன்னும் ஓரிரு மாதத்திற்குள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.