தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் – முதல்வரின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் - முதல்வரின் முடிவு என்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் - முதல்வரின் முடிவு என்ன?
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல் – முதல்வரின் முடிவு என்ன?

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் எதையும் வழங்காத திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து முழு விவரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

வலுக்கும் கோரிக்கை:

தமிழகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வுகால பயன்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை பற்றி வாய் திறக்காமல் உள்ளது.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – SMS, UMANG செயலி மூலம் PF பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி?

மேலும் 31-05-2022 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு,பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத் தொகை ஏதும் வழங்கப்படாத சூழ்நிலை தற்போது நிலவுவதாகவும், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ள போதிலும், 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் வருவாயும், போக்குவரத்துக் கழகங்களின் வருவாயும் ஓரளவு உயர்ந்து வருகின்ற நிலையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களையும் அளிக்காமல் அவர்களை வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள அரசு தி.மு.க. அரசு. ஓய்வூதியப் பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பதற்கான ஓர் உத்தரவாதத்தினைக் கூட அரசு அறிவிக்காதது ஓய்வு பெற்றவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

ஓய்வூதியப் பயன்கள் விரைவில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்றவற்றை கடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்போது வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு பயன்களையும் அளிக்காமல் வெறும் கையுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனுப்பி வைத்தது அவர்கள் மேல் இடி விழுந்தது போல் உள்ளது. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க உத்தரவிடுமாறு அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!