தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் பழைய பென்ஷன் திட்டம்? ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழக அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் என அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கூடிய விரைவில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிதியமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பழைய பென்ஷன் திட்டம்
கடந்த 2003ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக பலன் கிடைத்து வந்தது. இதற்கு பிறகு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு ஊதியம் கிடையாது. மேலும், சில சலுகைகளும் அரசு ஊழியர்களுக்கு சென்றடையவில்லை. இதனால் மீண்டும் பழையபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் என அனைவருமே போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் உத்தரவாதத்துடன் கூடிய விரைவில் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் 100+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400..!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக கட்சியின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரைக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவில்லை. தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கேட்டபோது முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.