தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – முக்கிய கோரிக்கை!
கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியா்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவின் போது அரசு ஓய்வூதியர்களுக்கான சில கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.
ஓய்வூதியா்கள்:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே இருந்து பலமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த வருடங்களில் நிலவிய கடும் கொரோனா பரவலின் போது அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது. ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதே போல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி – மின் கட்டணம் உயர்வு!
இந்த நேரத்தில் கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியா்கள் சங்க 35 ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை அமைப்பின் தலைவர் அய்யலுசாமி தலைமை தாங்கினார் செயலாளர் கேசவன் ஆண்டறிக்கையையும், பொருளாளா் அய்யனார் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனா். 75, 80 வயது நிறைவடைந்த சங்க உறுப்பினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
இவைகளை தொடர்ந்து விழாவின் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவப்படி ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும், வங்கிகளுக்கு வழங்கியது போல பணிக்கொடைக்கு உச்ச வரம்பு இருக்கக் கூடாது, மேலும் கம்யூடேசன் தொகையை பிடிக்கும் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை தீர்மானங்களும் வலியுறுத்தப்பட்டது.