தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி – மின் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
மின்கட்டணம் உயர்வு:
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் மக்கள். இந்த நிலையில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையத்தில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் நடைபெறும்.தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் தேவை என்பது இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு அதற்கான கட்டணங்களும் அதன் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை – அமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்கள்!
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து 3 அல்லது 4 மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், தற்போது ஏற்பட்டு உள்ள நிலக்கரி தட்டுப்பாடு தான் காரணமாக உள்ளது. தற்போதைய மின் தேவை ஒவ்வொரு மாநிலத்திலுமே 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 500 மெட்ரிக் டன் அளவுக்கும் குறைவான அளவிலேயே நிலக்கரியே தற்போது இருப்பில் இருந்து வருகிறது.
அதனால் மத்திய அரசு தற்போது ஒரு புதிய உத்தரவை வழங்கியுள்ளது. அது என்னவென்றால், நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருந்து வரும் காரணத்தால் அந்தந்த மாநில அரசுகள் மின்சார கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இதனால் மக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.