தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் என வாக்குறுதி அளித்துள்ளார்.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்:
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் கலந்து கொண்டு, முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமைத்தொகைக்காக மாதம் தோறும் ரூ.1000/- பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்படி மிகப்பெரிய நிதி நெருக்கடி நிலைமை அரசுக்கு உள்ள போதிலும் அரசு மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? காரணம் இது தான் – அதிர்ச்சியில் மாணவர்கள்!
அதன்படி அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார், அது மட்டுமல்லாமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு உறுதியை கொடுத்துள்ளார். அதன்படி அந்த வாக்குறுதியை விரைவில் நிறைவேற்றுவார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.