தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? முதல்வருக்கு கடிதம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஊழியர்கள் ஆட்சித் தலைவர்களிடம் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வருகின்றனர். மேலும் தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இதனை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வுக்கால பலன்கள் இல்லை. அதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கி உள்ளனர்.
சிலிண்டருக்கான மானியத்தொகை உங்களுக்கு கிடைத்துவிட்டதா? சரிபார்ப்பது எப்படி!
அதே போல தமிழக அரசு ஊழியர்களும் ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த மனுவை அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் வாயிலாக முதல்வருக்கு அனுப்பி தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.